நீட் போராட்டம் - SI சட்டையை பிடித்த நபரால் பரபரப்பு

74பார்த்தது
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், பாஜக அரசை கண்டித்தும் புதுக்கோட்டையில் இந்திய மாணவர்கள் சங்கம் பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கு வந்த போலீசார் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டனர். அதற்கு சங்கத்தினர் மறுப்பு தெரிவித்த நிலையில் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. அதில், ஒருவர் காவல் ஆய்வாளரின் சட்டையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி: நியூஸ் தமிழ் 24X7

தொடர்புடைய செய்தி