விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

79பார்த்தது
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை - மும்பை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18-ம் தேதி, சென்னையில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் கஸ்டமர் கேர்-க்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் தஞ்சையை சேர்ந்த பிரசன்னா என்பவர் கைதாகியுள்ளார். மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவரிடமிருந்து செல்போன் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி