விஜய் பிறந்தநாளில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

சென்னை நீலாங்கரையில் நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. அப்போது ஓடுகளை அடுக்கி வைத்து, கையில் நெருப்புடன் சிறுவன் ஒருவன் ஓட்டை உடைக்கும்போது, எதிர்பாராத விதமாக கையில் நெருப்பு பற்றி எரிந்தது. கையில் தீ பற்றி எரிந்த நிலையில் வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறி துடித்ததால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

நன்றி: News Tamil 24*7

தொடர்புடைய செய்தி