அரசு மெத்தனப்போக்காக செயல்படுகிறது. துரிதமாக செயல்பட்டிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். கள்ளச்சாராய மரணம் இல்லை என ஆட்சியர் தவறான தகவல் கொடுத்ததால்தான், மருத்துவமனைக்கு வர மக்கள் அலட்சியம் காட்டினர். மருத்துவமனையில் கள்ளச்சாராய விஷமுறிவு ஊசி இல்லை. சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளியில் வரும் என சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.