தன் விருப்பம் இல்லாமல் பெற்றதற்காக பெற்றோர் மீது பெண் புகார்

அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த காஸ் தியாஸ் என்ற பெண், தனது அனுமதியின்றி தன்னைப் பெற்றெடுத்ததற்காகத் தனது பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், "எனக்கு உண்மையில் பூமியில் பிறக்க ஓகே தானா என்பதை அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு கேட்கவே இல்லை, அதற்கான முயற்சியை கூட அவர்கள் எடுக்கவில்லை" என கூறியுள்ளார். அதனால் தனது விருப்பத்தை கேட்காமல் தன்னை பெற்றெடுத்ததற்காக அவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி