மக்கள் பசியாற்றும் வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு

58பார்த்தது
மக்கள் பசியாற்றும் வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு
பசியால் வாடும் மக்களின் பசியை போக்குவதே இறைவனை அடைவதற்கான வழி என்று கூறிய வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம் ஆண்டு, மே மாதம் 23-ம் தேதி அடுப்பு ஒன்றை ஏற்றி வைத்தார். வள்ளலார் ஏற்றி வைத்த அந்த அடுப்பு சாமானியர்களின் பசியைப் போக்குவதற்காக இன்னமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. இன்றைய தேதிக்கு தினமும் 1,300 முதல் 1,500 பேரின் பசியைப் போக்கி வருகிறது வள்ளலார் மூட்டிய இந்த அணையா அடுப்பு.

தொடர்புடைய செய்தி