சாம்சங் விவகாரம் - தீர்வு காண முதலமைச்சர் அறிவுறுத்தல்

61பார்த்தது
சாம்சங் விவகாரம் - தீர்வு காண முதலமைச்சர் அறிவுறுத்தல்
சாம்சங் ஆலை தொழிலாளர் போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டிஆர்பி ராஜா இணைந்து தீர்வு காண முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் ஆலை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (அக்.5) 24 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.