சிவகாசி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது.

64பார்த்தது
சிவகாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது. ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே நாரணாபுரம் காட்டு பகுதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சிவகாசி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. மேலும் ரகசிய தகவலின் அடிப்படை கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் வினாத்குமார் என்பவர் கஞ்சா பொட்டலங்கள் வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து சுமார்
ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் சிவகாசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி