கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எம்.பி (வீடியோ)

68பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று ஏரியில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாப உயிரிழந்தனர். குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்குழந்தைகளின் வீட்டுக்குச் சென்ற ஆரணி எம்.பி. தரணிவேந்தன், குழந்தைகளின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் குழந்தைகளின் உடலை பார்த்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி