திருப்பதி: 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

70பார்த்தது
திருப்பதி: 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையானை கிட்டத்தட்ட 18 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். புரட்டாசி மாதம் என்பதால் வழக்கத்தை விட திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் பெருமாளை தரிசிக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். செப்.19ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 68,835 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி