சிவகாசி: சீர்வரிசையுடன், சயன கோலத்தில் அம்மன் வீதி உலா...

83பார்த்தது
'சீர் வரிசை' பின் தொடர, 'சயன திருக்கோலத்தில்' பூ பல்லக்கில் எழுந்தருளிய 'சிவகாசி ஸ்ரீமாரியம்மன்'.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 7ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, தங்க ஊஞ்சலில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மன் வீதிகளில் வலம் வந்து கடைக்கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதனை தொடர்ந்து, கடைக் கோவிலில் இருந்து ஸ்ரீமாரியம்மன் சர்வ அலங்காரத்தில் 'சயன திருக்கோலத்தில்' பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அம்மனின் பூப்பல்லக்கின் பின்னே ஏராளமான பக்தர்கள் 'சீர் வரிசைகள்' சுமந்தபடி வீதிகளில் வலம் வந்தனர். சயன திருக்கோலத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனையடுத்து இரவு, ஸ்ரீமாரியம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி