இளம்பெண் ஒருவர் 15 ஆண்டுகளாக விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்த வீடியோவை அனிஷ் பகத் என்பவர் பகிர்ந்துள்ளார். தகவல்களின்படி, அந்த பெண் 16 வயது இருக்கும் போது உறவினர் ஒருவரால் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். அப்போது, அவரை வீட்டிற்குள் நுழைய விடாமல் அவரது குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். எங்கு நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.