காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம்

54பார்த்தது
மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளி குடும்பத்திற்கு ஓராண்டிற்கு ரூ. 5 இலட்சம் வரை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் அரசு மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி சிகிச்சை பெறலாம். விருதுநகர் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் வாரியாக செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 28 ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் கலந்து கொண்டு, காப்பீட்டு அட்டை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இம்முகாமிற்கு வருபவர்கள் குடும்பஅட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி