
மயிலத்தில் வெள்ளி வாகனத்தில் முருகர் வீதி உலா
மயிலம் முருகன் கோவிலில் இன்று 6ம் தேதி தங்க மயில் வாகன உற்சவம் நடக்கிறது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 11:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கிரிவலம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று 6ம் தேதி இரவு 8:00 மணிக்கு, தங்க மயில் வாகனத்திலும், 9ம் தேதி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. தொடர்ந்து 10ம் தேதி அதிகாலை 5:45 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட சுவாமிகள் செய்து வருகிறார்.