பணி மாறுதலில் சென்ற ஆசிரியர் - மாணவர்கள் பாச போராட்டம்!

71பார்த்தது
வேலூர் சின்னஅல்லாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக செந்தில்குமார் என்பவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருந்துள்ளார். இந்நிலையில், இவர் கடந்த சனிக்கிழமை அன்று மாவட்ட அளவில் நடைத்தப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வின் மூலம் பக்கத்து ஊரான சதுப்பேரி பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு மாறுதல் வாங்கி சென்றுள்ளார்.

தலைமை ஆசரியர் செந்தில்குமார் ஆசிரியரின் மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுடன் இனைந்து பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த, மாவட்ட கல்வி அதிகாரி தயாளன் பள்ளி குழந்தைகளிடம் பெற்றோர்களிடமும் "ஆசிரியர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பணி மாறுதல் வாங்கி சென்றுள்ளார். இதற்கும் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர்.

அதை ஏற்க மறுத்த மாணவர்களும் பெற்றோர்கள், பள்ளிக்கு ஆசிரியர் செந்தில்குமார் திரும்பி வந்தாகவேண்டும் இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி பள்ளி முகப்பிலேயே அமர்ந்து இருந்தனர். அதன் பின் ஆசிரியர் செந்தில்குமார் பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் பெற்றோர்களிடமும், மீண்டும் இதே பள்ளிக்கு வந்துவிடுகிறேன் என கூறி சமாதானபடுத்தினார்.

தொடர்புடைய செய்தி