100 நாள் வேலை திட்டம்.. அதிகாரிகள் மீது நீதிபதிகள் அதிருப்தி

60பார்த்தது
100 நாள் வேலை திட்டம்.. அதிகாரிகள் மீது நீதிபதிகள் அதிருப்தி
கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த முறைகேடு பற்றி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அலுவலர்கள் வரை முறையாக கண்காணிப்பது இல்லை. அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து பணிகளை செய்வதும் கிடையாது” என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி