பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய நபர்கள் - பரபரப்பான சிசிடிவி

2266பார்த்தது
அதிகமாக நிரப்பிய பெட்ரோலை எடுத்ததால் கூட்டமாக வந்து பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய நபர்கள். பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவல்

வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் அடுத்த முடினாம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் பங்கில் கடந்த 24 -ம் தேதி அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் தங்களது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போட்டுள்ளனர். அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர் மதன் கூடுதலாக பெட்ரோல் போட்டுள்ளார். இதற்கான பணம் கேட்டதற்க்கு இளைஞர்கள் பணம் இல்லை என்றதால் ஊழியர் மதன் கூடுதலாக போட்ட பெட்ரோலை இருசக்கர வாகனத்தில் இருந்து எடுத்துள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்த இளைஞரின் தந்தை ஆட்களோடு வந்து பெட்ரோல் பங்க் ஊழியர் மதனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஊழியர் மதன் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கே. வி. குப்பம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து பெட்ரோல் பங்க் ஊழியர் மதனை தாக்கிய முடினாம்பட்டு பகுதியை சேர்ந்த ரஜினி, ராஜசிம்மன், கபிலன் ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் வேறு மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

தற்பொழுது இவர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி