பள்ளிக் குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ கூடாது

57பார்த்தது
பள்ளிக் குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ கூடாது
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைப்படி, பள்ளிகளில் குழந்தைகளை அடித்தல், கிள்ளுதல், அறைதல், நிற்க வைத்தல், முட்டி போட வைத்தல், அறைக்குள் அடைத்தல் உள்ளிட்டவை தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தையை கிண்டலாக பேசுதல், பெயரைக் கூப்பிட்டு திட்டுதல், இழிவாக பேசுதல், பின்னணியை வைத்து திட்டுதல் உள்ளிட்டவை தவறு எனவும், எதிர்பார்த்த மதிப்பெண் பெறாததை சுட்டிக்காட்டி குறைவாக பேசக்கூடாது எனவும் கூறியுள்ளது. தண்டனை வழங்கும் போக்குடைய பள்ளிகளுக்கு NOC வழங்கப்படுவது மறுபரிசீலணை செய்ய வேண்டும் என NCPCR வழிகாட்டு நெறிமுறை கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி