அழகர் கோவில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடந்து வரும் நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 27) மூன்றுமாவடி வழியாக அதிகாலை 3 மணிக்கு அப்பன்திருப்பதியை அடைந்தார். இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 7 மணிக்கு கள்ளந்திரியை அடையும் அவர்,இன்று காலை 11.30 மணிக்குள் மலையை அடைகிறார்.