சிறுமி பலாத்காரம் - குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

81பார்த்தது
சிறுமி பலாத்காரம் - குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தவர் சிவா (62). இவர் 2019 ஆம் ஆண்டு தனது கடைக்கு வந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி தரப்பில் அளித்த புகாரின் பேரில் சிவாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது, சிவாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி