ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தியில் இருந்த 14 வயது மாணவி ஒருவர், பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட பள்ளி நிர்வாகம் யாருக்கும் தெரியாமல் மாணவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளது. இதனையறிந்த போலீசார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.