திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரளா எல்லை பகுதிகளில் உள்ள மறையூர் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இரு மாநில வனத்துறையினர் யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.