பல்லடம் அருகே மரத்திற்கு ஆசீட் ஊற்றிய மர்ம நபர்

4417பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் வசித்து வருபவர் சதாசிவம். இவர் தனது வீட்டின் முன்பு ஐந்து மரங்களை 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதியில் சாலை பணிகள் மேற்கொள்வதற்காக சதாசிவத்தின் வீட்டின் முன்பு இருந்த மரங்களை வெட்ட முயன்றுள்ளனர்.

மரங்களுக்கு அடியில் குடிநீர் குழாய் செல்வதாகவும் அதனால் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மரங்களுக்கு அடியில் குடிநீர் குழாய் எதுவும் செல்லவில்லை என காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு மரங்களை வெட்டாமல் சாலை பணிகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். ஊராட்சி நிர்வாகமும் சதாசிவம் வசிக்கும் பகுதியில் மட்டும் சாலை பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் சதாசிவம் வளர்த்து வரும் ஐந்து மரங்களை சுற்றியும் ஆசிட் ஊற்றி மரங்களை அழிக்க முயன்றுள்ளனர். மர்மநபர்கள் மரங்களுக்கு ஆசிட் ஊற்றும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதாசிவம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி