மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு

72பார்த்தது
மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற மூன்றாம் பாலினத்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இன்று இந்த வழக்கு விசாரணையில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டபின் 3 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் என அரசு சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து வழக்கை ஜூலை 5ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி