மணச்சநல்லூரில் இளைஞர் தற்கொலை

5337பார்த்தது
மணச்சநல்லூரில் இளைஞர் தற்கொலை
சமயபுரம் அருகே எஸ். புதூர் பூசாரிகொட்டத்தை சேர்ந்த தமிழழகன். இவரது மகன் திவாகர் (25). இவர் திருச்சி அண்ணாசிலை அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மெடிக்கல் பிரிவில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் காதலை ஏற்க மறுத்ததாகவும். கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் எஸ். புதூரில் உள்ள ஒரு தோட்டத்தில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அந்த பகுதியினர் சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி