வடகிழக்கு பருவமழை அக்.15ஆம் தேதி முதல் தொடக்கம்

72பார்த்தது
வடகிழக்கு பருவமழை அக்.15ஆம் தேதி முதல் தொடக்கம்
வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே, பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி