சுங்கச்சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் தீ விபத்து!

58பார்த்தது
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் அருகே உள்ள சுங்கசாவடி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டு மளமள என எரிந்து ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் சிப்காட் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் தீ விபத்துக்கு குறித்து புதியம்புத்தூர் காவல்துறையினர் விசாரணை

தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர் பாண்டியாபுரம் அருகே சுங்கச்சாவடி அமைந்துள்ளது இந்த சுங்கச்சாவடி அருகே அதன் அலுவலகம் அமைந்துள்ளது இந்த அலுவலக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதான ஆம்புலன்ஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் தீ பரவி மளமளவென எரியத் துவங்கியது இந்த தீயானது சுங்கசாவடி அலுவலகத்திற்கு உள்ளேயும் பரவி அங்கு கதவில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது


தகவல் அறிந்த அந்தப் பகுதிக்கு வந்த சிப்காட் தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அனைத்தனர் மேலும் இந்த தீ விபத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து புதியம்புத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி