பூந்தமல்லியில் சித்த மருத்துவர் ஊசி போட்டதில் முதியவர் பலி.

53பார்த்தது
பூந்தமல்லியில் சித்த மருத்துவர் ஊசி போட்டதில் முதியவர் பலி


பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் சித்த மருத்துவமனை வைத்திருப்பவர் பெருமாள்(50), கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்

இந்த நிலையில் ராஜேந்திரன் 70 என்பவர் உடல் நிலை குறைவால் மருத்துவமனைக்கு வந்த நிலையில் அவருக்கு சித்த மருத்துவரான பெருமாள் ஊசி போட்டுள்ளார் ஊசி போட்ட அடுத்த 10 நிமிடத்தில் ராஜேந்திரன் இறந்து போனார்

இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சித்த மருத்துவரான பெருமாள் ஆங்கில மருத்துவம் பார்த்தது குறித்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி