சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு

59பார்த்தது
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 1ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை காலங்களில் அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி