பறவைக் காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

83பார்த்தது
பறவைக் காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர முய்ற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும், நோய்வாய்பட்ட மற்றும் உயிரிழந்த கோழி, வாத்துகள் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.