அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு

82பார்த்தது
அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்து மத பண்டிகை தீபாவளியை அழிக்கவே பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுவதாகவும், கிறிஸ்தவ மிஷனரிகளின் தூண்டுதலே இதற்கு காரணம் என்றும் பேசியிருந்தார். அவரின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அண்ணாமலை உச்சநீதிமன்றத்துக்கு சென்ற நிலையில் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.