எச்.ராஜாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

55பார்த்தது
எச்.ராஜாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி எச்.ராஜா மனு அளித்திருந்தார். இந்நிலையில், விசாரணையை சந்திக்க வேண்டும் என எச்.ராஜாவிற்கு அறிவுறுத்திய நீதிமன்றம் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 2018ம் ஆண்டு பெண்கள் குறித்தும், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும் எச்.ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாக இந்த வழக்கு தொடரப்பட்டது.

தொடர்புடைய செய்தி