திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் இன்று நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் திமுக நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நகராட்சி ஆணையர்
எஸ் கே புஷாரா முன்னிலையில் நடைபெற்றது
பொன்னேரி நகராட்சியில் எதுவுமே சரியில்லை புதிதாக கட்டப்பட்ட நகர்மன்ற கட்டிடத்தில் கழிப்பிட வசதி குடிநீர் வசதி இல்லை நகர்மன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலை உள்ளதாகவும் நகராட்சியில் குப்பைகள் முறையாக கையாளுவதில்லை அதில் முறைகேடுகள் நடப்பதாகவும் டெங்கு கொசு ஒழிக்கும் பணியாளர்களுக்கு முறைகேடாக வருகை பதிவு இல்லாத ஊழியர்களுக்கும் சேர்த்து ஊதியம் வழங்கப்படுவதாகவும் கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் இல்லை குப்பை அள்ளும் மின்கல வாகனங்கள் இல்லை இதே நிலை தொடர்ந்தால் அடுத்த கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என திமுக உறுப்பினர்கள் கூட்டத்திலேயே தங்களது கருத்துக்களை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினர் நகராட்சி நிர்வாகத்தி ஆணையர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் செயல்பாடு சரி இல்லை எனக் கூறி அதிமுக நகர் மன்றத் துணைத் தலைவர் விஜயகுமார் கூட்டத்தில் கோபத்துடன் பேசி வெளியேறினார்