கும்மிடிப்பூண்டி - Kummidipoondi

ஜடாமுனிஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

திருவள்ளுவர் மாவட்டம் திருவள்ளூர் அருகே ஜடா முனீஸ்வரர் ஆலயம் மற்றும் பால முனிஸ்வரர் ஆலயத்தில் சித்திரைத் பௌர்ணமி திருவிழாவையொட்டி பெருந்திரளான பக்தர்கள் ஆடு கோழி ஆகியவற்றை பலி கொடுத்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளுர் அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பால முனீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமியை யொட்டி திருவிழாவானது அப்பா. அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்ற திருவிழாவில் திருப்பாச்சூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது பின்னர் சிறப்பு பூஜை அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டன.

வீடியோஸ்