திருச்செந்தூர் - Thiruchendur

ஆறுமுகநேரி அருகே ஆடு திருடிய வாலிபர் கைது!

ஆறுமுகநேரி அருகே ஆடு திருடிய வாலிபர் கைது!

ஆறுமுகநேரி அருகே ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் மாரி கிருஷ்ணன் (53), இவர் தலைவன்வடலி கிராமத்தில் ஆட்டு கொட்டகை வைத்துள்ளார். அங்கிருந்த ரூ. 12ஆயிரம் மதிப்புள்ள ஒரு ஆடு திருடு போய் விட்டது இதுகுறித்து அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் சுந்தரமூர்த்தி (23) என்பவர் ஆட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஆட்டையும் பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా