பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழப்பு

78பார்த்தது
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழப்பு
பீகார் சீவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் 28 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. 22 பேர் நோய்வாய்ப்பட்டதாகவும், மூவர் பார்வை இழந்ததாகவும், அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மதுவிலக்கு அமைச்சர் ரத்னேஷ் சதா தெரிவித்துள்ளார்.