கப்பல் மோதி மீனவர்கள் வலைகள் சேதம்; இழப்பீடு தர கோரிக்கை

73பார்த்தது
தூத்துக்குடி புன்னகாயல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சகாயராஜ் மற்றும் தாமஸ் இவர்கள் தங்களது இரண்டு நாட்டுப் படகுகளில் 11 மீனவர்களுடன் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை புன்னக்காயல் கடல் பகுதியில் இருந்து நடுக்கடலில் 9 கடல் மைல் தொலைவில் வலைகளை வீசி மீன்பிடி தொழில் செய்து கொண்டிருந்தனர்
அப்போது மார்சல் ஐலேண்ட் தீவை சொந்தமாக கொண்ட எம் டி லூபுரா என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் எரிவாயுவை இறக்கிவிட்டு திரும்பிச் செல்லும்போது தனது வழித்தடத்தில் இருந்து மாறி மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் கடல் பகுதிக்கு சென்றுள்ளது இதில் அங்கே மீன்பிடித்து கொண்டிருந்த சகாயராஜ் என்பவரது படகில் மோதியுள்ளது மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க கடலில் வீசி இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான வலைகளையும் கிளித்து அறுத்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் புன்ன காயல் மீனவ கிராம ஊர்கமிட்டி சார்பாக இன்று மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட மீனவர்கள் சேதம் அடைந்த வலைகளை மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தரையில் போட்டு இவ்வாறு தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமான கப்பலிடமிருந்து தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை தங்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி