மேக மூட்டத்துடன் சாரல் மழை!

82பார்த்தது
தூத்துக்குடியில் மாநகர பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்பு அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி


தூத்துக்குடியில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்யாமல் வெயில் வாட்டி வதைத்தது செப்டம்பர் மாதம் கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்பு தூத்துக்குடியில் வெயில் 100 டிகிரி தாண்டி அடித்தது இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்

நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் மாநகரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பரவலாக சாரல் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வருகிறது இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி