பாக்கெட் சாராயம் விற்கத் தடை

81பார்த்தது
பாக்கெட் சாராயம் விற்கத் தடை
புதுச்சேரியில் பாக்கெட்டில் சாராயத்தை அடைத்து விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பாக்கெட்டில் சாராயத்தை அடைத்து விற்பனை செய்ய கலால்துறை மீண்டும் தடை விதித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு உள்ள தடை குறித்து சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 85 சாராயக் கடைகளும், காரைக்காலில் 25 சாராயக் கடைகளும் உள்ளன.