அதிமுக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு

76பார்த்தது
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் இன்று நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி கடம்பூர் ராஜு மற்றும் அதிமுகவினர் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தனர்

அப்போது இவர்கள் வந்த காருக்கு வழி விடாமல் தூத்துக்குடி ஆறுமுகநேரி மடத்துவிளை சிஎஸ்ஐ தேவாலயத்தில் போதகராக (குருவானவராக) பணியாற்றி வரும் ஜெகன் என்பவர் சென்றுள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாத்து ஓடை மேம்பாலம் அருகே வரும்போது ஜெகனின் காரை வழிமறித்து போதகர் என தெரியாமல் தாக்கியுள்ளனர்

இதில் காயமடைந்த போதகர் ஜெகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஜெகனிடம் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் மதன் விசாரணை நடத்தினார் இதைத் தொடர்ந்து ஜெகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுகவினர் 17 பேர் மீது முத்தையாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி