ஓட்டப்பிடாரம் - Ottapidaram

புதிதாக துப்பாக்கி சூடு தளத்தை எஸ்பி துவங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்ட துப்பாக்கி சூடு கழகம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள துப்பாக்கி சூடு தளத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார். ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வகையில் இளம் துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட துப்பாக்கி சூடும் கழகம் சார்பில் தூத்துக்குடடியில் புதிதாக இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், உள்ளரங்க துப்பாக்கி சூடு தளம் கட்டப்பட்டுள்ளது. இந்த உள்ளரங்க துப்பாக்கி சூடு தளத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட துப்பாக்கி சூடு கழக தலைவர் ஜெகதீஷ் ராஜா மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் துப்பாக்கி சூடு கழக உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி ஆல்பர்ட் ஜான் கூறுகையில், தற்போது நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு பல்வேறு பதக்கங்கள் கிடைத்துள்ளது. எனவே இந்த துப்பாக்கி சூடு தளத்தை பயன்படுத்தி இளம் வீரர்களை உருவாக்கி வருங்காலங்களில் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை பெறும் வகையில் வீரர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా