வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், பணம் கொள்ளை;

58பார்த்தது
தூத்துக்குடி கேடிசி நகரில் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், பணம் கொள்ளை; சிப்காட் போலீசார் விசாரணை

தூத்துக்குடி கேடிசி நகரில் வசிப்பவர் நிர்மல்ராஜ் - சலோமியா தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

நிர்மல் ராஜ் பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அவரது தாய் மாமன் மகள் திருமணத்திற்காக குடும்பத்துடன் தஞ்சாவூர் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் மாடி கதவு உடைக்கப்பட்டு அதன் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் பீரோவில் இருந்த மோதிரம், வளையல், , பிரேஸ்லெட் செயின் என 34 கிராமம் தங்க நகைகள், ரொக்க பணம் ரூபாய் 2 லட்சம், மகள்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணம் ரூபாய் 1500 ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து நிர்மல்ராஜ் சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி