பூனையால் பாம்பு கடிக்கு ஆளாகி உயிரிழந்த பெண்

75பார்த்தது
பூனையால் பாம்பு கடிக்கு ஆளாகி உயிரிழந்த பெண்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேரு நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சாந்தி (58). இவர்களது மகன் சந்தோஷ். இவர்கள் பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று பூனை வீட்டு வளாகத்திற்குள் இருந்தபோது கட்டுவிரியன் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதனை கடித்த பூனை, கவ்விக்கொண்டு வீட்டிற்குள் கொண்டுவந்து போட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த பாம்பு, தூங்கிக்கொண்டிருந்த சாந்தியை கடித்துள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.