மூதாட்டியிடம் நகை பறிப்பு - புதுமாப்பிள்ளை கைது

60பார்த்தது
மூதாட்டியிடம் நகை பறிப்பு - புதுமாப்பிள்ளை கைது
மயிலாடுதுறை அருகே வீட்டின் அருகே நடைபயிற்சி செய்த 67 வயது பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிக்கப்பட்ட வழக்கில், நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஆடுதுறை திருமஞ்சன வீதியைச் சேர்ந்த விஜயபாலன் (26) என்பவரை கைது செய்துள்ளனர். ஆன்லைன் செயலிகளில் ரூ.6 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ள விஜயபாலன், அதனை அடைக்க நகைபறிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதலித்த பெண்ணையும் திருமணம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி