தேனியில் கலைஞர் கனவு இல்ல பணி ஆணை வழங்கிய எம். பி

57பார்த்தது
தேனியில் கலைஞர் கனவு இல்ல பணி ஆணை வழங்கிய எம். பி

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் இன்று தேனி எம். பி தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட தேனி, பெரியகுளம் உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல பணி ஆணையினை தேனி எம். பி வழங்கினார். இந்நிகழ்வில் கலெக்டர் சஜீவனா , பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆண்டிபட்டி மகாராஜன் உள்ளிட்ட , கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி