தமிழக அரசு மேட்டூரில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

83பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா அலுவலகத்தில், வருவாய் தீர்வாய கணக்குகள் (ஜமாபந்தி)  துவங்கியது. இதில் அய்யம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான சக்கராப்பள்ளி, வழுத்தூர், மையச்சேரி உள்ளிட்ட 25-கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழக நலிவுற்ற விவசாய சங்கம் சார்பில், டெல்டா மாவட்டங்களுக்கு விவசாயிகளின் நலன் கருதி மேட்டூரில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன் கருதி தண்ணீர் திறக்காதது வேதனை அளிப்பதாகவும், பாபநாசம் தாலுக்கா பகுதியில் தூர்வார படாத நிலையில் உள்ள பாசன வாய்க்கால், துணை வாய்க்கால் உட்பட அனைத்து பாசன வாய்க்காளர்களும் தூர்வாரப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி  ஜமாபந்தி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி