தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

59பார்த்தது
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி