அண்ணன் இறந்த செய்தி கேட்டு தங்கையும் உயிரிழப்பு

50பார்த்தது
அண்ணன் இறந்த செய்தி கேட்டு தங்கையும் உயிரிழப்பு
திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த வலையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (90). சிலம்பாட்ட வீரரான இவருக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அதே பகுதியில் உள்ள இவரது தங்கை நவமணியும் (78) அண்ணன் இறந்த செய்தி கேட்டு நொடிப் பொழுதில் உயிரிழந்தார். அண்ணன், தங்கை இருவரின் சடலமும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி