
வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை; ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டி ஊராட்சி சின்னமுருக்கம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. எதிர்பாராத விதமாக வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில், குடோனில் வேலை செய்து கொண்டிருந்த செண்பகம், திருமலர், மஞ்சு ஆகிய 3 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு தலா நான்கு லட்சம் ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளது. அத்தோடு உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். பட்டாசு ஆலை விபத்துகள் அவ்வப்போது நடந்து வருவது கவலை அளிக்கிறது. இதுபோன்று நிகழாதவாறு போதிய முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு விரைந்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.