இந்தியாவில் வாட்ஸ்அப் முடங்கியது.. பயனர்கள் அவதி

76பார்த்தது
இந்தியாவில் வாட்ஸ்அப் முடங்கியது.. பயனர்கள் அவதி
வாட்ஸ்அப் செயலியின் சேவை இன்று இந்தியாவில் முடங்கியது. இதனால், ஆயிரக்கணக்கான பயனர்கள் செயலி மூலம் தகவல்களை அனுப்பவோ, ஸ்டேட்டஸ்களை பதிவேற்றவோ முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து நிகழ்நேர செயலிழப்பு கண்காணிப்பு சேவையான டவுன் டிடெக்டர் கூறுகையில், "கிட்டத்தட்ட 81% பயனர்கள் தகவல்களை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 16% பேர் ஒட்டுமொத்த பயன்பாட்டு செயல்பாட்டில் சிக்கல்களை சந்தித்துள்ளனர்" என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி